வீடியோ ஸ்டோரி

10 போன்களில் 'பெகாசஸ்' ஊடுருவியது உறுதி - THE WIRE ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தகவல்

JustinDurai
வேவு பார்ப்பதற்காக பட்டியலிடப்பட்ட தொலைபேசி எண்கள் அனைத்தையும் சோதனை செய்தால் மட்டுமே, அவைகளில் பெகாசஸ் நிறுவப்பட்டுள்ளதா என தெரியவரும் என்று இவ்விவகாரத்தை இந்தியாவில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த 'THE WIRE' இணையதள செய்தி ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
'புதிய தலைமுறை'யின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சித்தார்த் வரதராஜன், ''வேவு பார்க்க 300 தொலைபேசி எண்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவை அனைத்தும் வேவு பார்க்கப்பட்டதாக உறுதியாக கூறமுடியாது. அத்தனை போன்களையும் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே பெகாசஸ் நிறுவப்பட்டதா என உறுதியாக தெரியவரும்.
10 போன்களில் ஊடுருவி வேவு பார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் செல்போன் மேற்குவங்க தேர்தலின்போது வேவு பார்க்கப்பட்டுள்ளது. இதனால், யாருடைய செல்போனும் வேவு பார்க்கப்படவில்லை என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது'' என்று கூறினார்.