வீடியோ ஸ்டோரி

ஒரு டீ குடிச்சிட்டு திமுக தொண்டர்கள் நாள் முழுசும் வேலை செய்வாங்க : தமிழச்சி தங்கபாண்டியன்

Sinekadhara

கஜானாவை அதிமுகவினர் காலி செய்துவிட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்வார்கள் என அதிமுகவினர் கூறுவது வெட்கக் கேடானது என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வடபழனியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஒரு டீயை குடித்துக் கொண்டு திமுக தொண்டர்கள் வேலை செய்வார்கள், கஜானவை காலிசெய்தபிறகு ஊழல் செய்ய நீங்கள் எதை விட்டு வைத்துள்ளீர்கள் என்று அதிமுகவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.