வீடியோ ஸ்டோரி

’புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக போராட மாணவர்கள் தயாராக இருங்கள்’ - அமைச்சர் பொன்முடி

ச. முத்துகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் தற்போது உள்ள கல்வி முறையால் தான் உயர் கல்வி படிப்போர் விகிதம் 23 விழுக்காட்டிலிருந்து 57 விழுக்காடாக உயர்ந்ததாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

“மாணாக்கரின் போராட்டங்களால்தான் இன்றைய கல்வித்திட்டம் வளர்ந்துள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது மாணவர்களின் கடமை. மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து போராடத் தயாராக இருக்க வேண்டும்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.