வீடியோ ஸ்டோரி

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தம்பிதுரை

Veeramani

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தினார்

இது தொடர்பாக பேசிய தம்பிதுரை, “தடுப்பூசிகள் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது மிகவும் முக்கியமானது. கொரோனா முதல் அலையின் போது அதை கட்டுப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டது” என தெரிவித்தார்