வீடியோ ஸ்டோரி

கிருஷ்ணகிரி: பெண்களை கேலிசெய்த இளைஞர்களை கட்டிவைத்து அடித்த மக்கள் - வீடியோ

JustinDurai
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, வாகனத்தில் சென்ற பெண்களை, காரில் பின்தொடர்ந்து கிண்டல் செய்துகொண்டே சென்ற இளைஞர்களில் சிலரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.
உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டு வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பெண்களை, காரில் பின் தொடர்ந்த இளைஞர்கள் 7 பேர், கேலி செய்தவாறே பின்தொடர்ந்துள்ளனர். கோபமடைந்த வாகன ஓட்டுநர், மது போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த இளைஞர்கள், வாகனத்தை மறித்து நிறுத்தி ஓட்டுனரை தாக்கியுள்ளனர். சப்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், விபரத்தை அறிந்து இளைஞர்களை பிடிக்க முற்பட்டபோது, 4 பேர் காரில் தப்பிச் சென்றனர்.
வசமாக சிக்கிக்கொண்ட 3 இளைஞர்களையும் மரத்தில் கட்டி வைத்து மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று 3 இளைஞர்களையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துவந்தனர். தப்பிச்சென்ற மேலும் நான்கு பேரையும் கண்டுபிடித்து வரவழைத்து, 7 பேரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.