வீடியோ ஸ்டோரி

அரசுப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகளாக அடையாளம் காணப்பட்ட பள்ளிகள் - காரணம் என்ன?

webteam

திருச்சி மாவட்டத்தில் மூன்று அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக பள்ளிக்கல்வித் துறை அடையாளம் கண்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, லால்குடி ஓன்றியத்தில், எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மணிகண்டம் ஒன்றியத்தில், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறனை அடையாளம் காண பல பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், புத்தூர் தொடக்கப் பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த நிலையில், தற்போது 170 பேர் கல்விகற்று வருகின்றனர்.