வீடியோ ஸ்டோரி

சேலம்: அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த ஐஏஎஸ் அதிகாரி

Veeramani

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்த தர்மலாஸ்ரீ, கடந்த 2018 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டர் தாமரைக் கண்ணனை மணந்தார், இதனையடுத்து கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக கடந்த வாரம் சேர்ந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மகப்பேறு விடுப்பில் சொந்த ஊரான சேலத்திற்கு வந்த தர்மலாஸ்ரீ சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்றிரவு அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தர்மலாஸ்ரீ கூறுகையில், அரசு மருத்துவமனையில் சுய விருப்பத்தின் பேரில் சேர்ந்து சிகிச்சை பெற்றதாகவும், சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.