வீடியோ ஸ்டோரி

தருமபுரி: 4 மாத கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் போராட்டம்

Sinekadhara

தருமபுரி அருகே கர்ப்பிணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த வனிதாவுக்கு மானியதஹள்ளியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருடன் திருமணம் நடந்து 7 மாதங்களே ஆகின்றன. வேலைக்கு செல்லாமல், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படும் மாணிக்கவாசம், நேற்று வீட்டிற்கு வந்த மாமியாரையும் தாக்கியதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், குளியலறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் வனிதாவின் உடல் மீட்கப்பட்டது. உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, வழியில் நிறுத்தி மது அருந்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.

வனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி ஆம்புலன்ஸும் முற்றுகையிடப்பட்டது. காவல்துறையினர் சமாதானப்படுத்திய பின் கலைந்து சென்றவர்கள், மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த வனிதாவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தருமபுரியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.