வீடியோ ஸ்டோரி

60அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த நாய்... துணிச்சலாக களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள்! #Video

webteam

புதுக்கோட்டை அருகே 60அடி அழ கிணற்றில் தவறிவிழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியை அடுத்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான நாய் ஒன்று, அந்த கிராமத்தில் உள்ள 60அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி நாயை பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அந்த வீடியோ காட்சியை இங்கே காணுங்கள்: