'விருத்தாச்சலம் தொகுதி மக்களின் குரலாக தன்னுடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்' என்று அத்தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூரில் 'புதிய தலைமுறை' செய்தியாளருடன் பேசிய அவர், ''விருத்தாச்சலம் என் உயிரிலும் உணர்விலும் ரத்தத்திலும் கலந்த தொகுதி. பத்து ஆண்டுகளாக விஜயகாந்த் செய்த உதவிகளை மக்கள் மறக்கவில்லை. மக்களிடம் அமோகமான வரவேற்பு உள்ளது. நிச்சயமாக விருத்தாச்சலம் தொகுதியில் 'முரசு' வெல்லும். விருத்தாச்சலம் தொகுதி மக்களின் குரலாக தன்னுடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்'' என்று கூறினார்.