வீடியோ ஸ்டோரி

மத்திய பிரதேசம்: மீசையை முறையாக வைக்காத காவலர் பணியிடைநீக்கம்

கலிலுல்லா

மீசையை முறையாக வைக்காததற்காக மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கூட்டுறவுத்துறை முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பிரிவில் காவலர் மற்றும் ஓட்டுநராக ராகேஷ் ராணா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் விங் கமாண்டர் அபிநந்தன் போன்று மீசை வைத்திருந்ததாகத் தெரிகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்குப் பின்னரும், ராகேஷ் ராணா மீசையை முறையாக வைக்கவில்லை என கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.