வீடியோ ஸ்டோரி

கும்மிடிப்பூண்டி: அதிமுக, திமுகவினரிடையே மோதல் - போலீசார் லேசான தடியடி!

sharpana

கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையத்தில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு 100 மீட்டர் முன்பாக அதிமுகவினர் மற்றும் திமுக தங்களது கட்சிகளுக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. பின் அந்த தகராறு மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை விரட்டினர். இருப்பினும், அந்த முயற்சி பலனளிக்காமல் போகவே கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ராணுவ படையினரும் அங்கு வந்தனர். தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் கூடுதலான துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.