வீடியோ ஸ்டோரி

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

கலிலுல்லா

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் புறப்பட்டதால், கூடுவாஞ்சேரி முதல் மாமண்டூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை, தைப்பூசம் என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றதால், கூடுவாஞ்சேரி முதல் மாமண்டூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. மேற்கொண்டு நெரிசல் ஏற்படாதபடி போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.