வீடியோ ஸ்டோரி

மன்னார்குடியில் மழையால் சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

கலிலுல்லா

மன்னார்குடியில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி உப்புகாரத்தெருவை சேர்ந்த சரஸ்வதி என்ற மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். தொடர் மழையால் அவர் வசித்துவந்த கூரை வீட்டின் சுவர் பலவீனமடைந்து இடிய தொடங்கியது.

நேற்று இரவு மூதாட்டி சரஸ்வதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலையில் சுவர் இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சரஸ்வதி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்