வீடியோ ஸ்டோரி

நாமக்கல்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய தூசூர் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி

kaleelrahman

நாமக்கல் மாவட்டத்தில் பெரிய ஏரியான தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியிருக்கும் நிலையில், ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அங்கு நேரில் ஆய்வு செய்தார்.

தொடர் மழை காரணமாக பெரிய ஏரியான தூசூர் ஏரி, கடந்த 28ஆம் தேதி நிரம்பிய நிலையில், உபரி நீர் வெளியேறி வருகிறது. 388 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின் ஏரி நிரம்பி இருப்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.