வீடியோ ஸ்டோரி

புரட்டாசி பிறந்தது... இறைச்சிக் கடைகளில் கூட்டம் குறைந்தது

Sinekadhara

புரட்டாசி மாதம் பிறந்துள்ளதை அடுத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனை மந்தமடைந்துள்ளது.

மதுரையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், இன்று பல கடைகள் வெறிச்சோடியுள்ளன. நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் ஒருசிலரே இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த வாரங்களில் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி 180க்கு விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.