வீடியோ ஸ்டோரி

மதுரை: சிகரெட் கடனாக தர மறுத்த கடைக்காரர் அடித்துக்கொலை - 3 இளைஞர்கள் வெறிச்செயல்

Sinekadhara

மதுரை அருகே சிகரெட்டை கடனாக கொடுக்க மறுத்த பெட்டிக்கடைக்காரரை மூன்று இளைஞர்கள் அடித்து படுகொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை நடத்திவந்த வினோத் என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் சிகரெட்டை கடனாக கேட்டுள்ளனர். ஏற்கெனவே பெற்றக் கடனை திருப்பி தராததால், மூன்று இளைஞர்களுக்கும் சிகரெட்டை கடனாக தர வினோத் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்களும், அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வினோத் பலத்த காயமடைந்திருந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வினோத்தை தாக்கிய 3 இளைஞர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.