வீடியோ ஸ்டோரி

பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினம் - தலைவர்கள் மரியாதை

Sinekadhara

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினைத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள, அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள், துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கொள்ள உள்ள, கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.