வீடியோ ஸ்டோரி

சென்னை: நகை வாங்குவது போல் நடித்து 3 சவரன் செயின் திருட்டு

Sinekadhara

சென்னையில் நகை வாங்குவது போல நடித்து 3 சவரன் செயினை திருடிச் சென்ற பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

முகப்பேர் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு கடந்த 26ஆம் தேதி பெண் ஒருவர் வாடிக்கையாளர் போல் சென்றுள்ளார். சிறிது நேரம் நகைகளை பார்த்த அப்பெண், இடது கையில் இரு செயினை எடுத்து அதில் ஒன்றை திருடிவிட்டார். பின்னர் ஏடிஎம் சென்று பணம் எடுத்துவருவதாக கூறி வெளியேறினார். ஆனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தப்போது 3 சவரன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்த புகாரில் பொழிச்சலூரைச் சேர்ந்த தாட்சாயணி மற்றும் நகை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கணவரையும் கைது செய்தனர்.