வீடியோ ஸ்டோரி

ஞாயிறு முழு ஊரடங்கு: திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல தடையில்லை - தமிழக அரசு

kaleelrahman

நாளை ஞாயிற்றுக் கிழமை முழு ஊரங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் மற்றும் கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு, ஆனால், நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.