வீடியோ ஸ்டோரி

ஜன. 21 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் - மீனவர்கள் அறிவிப்பு

கலிலுல்லா

இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களையும், உடனடியாக விடுவிக்கக் கோரி, வருகிற 21 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கலுக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்த நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையிலும், மீனவர்கள் விடுவிக்கப்படாததால், வருகிற 21 ஆம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.