வீடியோ ஸ்டோரி

மதுரை: தனியார் பள்ளியில் இலவச கட்டாய கல்வி - குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை

PT WEB

மதுரையில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள 5,614இடங்களுக்கு 18,000 மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 5,614 இடங்களுக்கு 18,347 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 434 பள்ளிகளில் 5614 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.