வீடியோ ஸ்டோரி

வர்க்கி சாப்பிட கடையின் கதவை உடைத்த யானை - வீடியோ எடுத்த கடைக்காரர்

PT WEB

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, அதிகாலை நேரத்தில் கடையின் கதவை உடைத்த யானை, வர்க்கி பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டது.

கூடலூர் அருகே, செலுக்காடி பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு இரவு நேரங்களில் ஊருக்குள் நடமாடி வருகின்றன. இன்று அதிகாலை செலுக்காடியில் கடை ஒன்றின் கதவை உடைத்த யானை ஒன்று, அங்கிருந்த வர்க்கி பாக்கெட்டுகளை ஒன்று ஒன்றாக எடுத்து சாப்பிட்டது. சப்தம் கேட்டு வந்த கடை உரிமையாளர் ஜன்னலை திறந்து பார்த்தபோது யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யானை வர்க்கி சாப்பிடும் காட்சிகளை வீடியோவாக அவர் பதிவு செய்தார்.