e-service center
e-service center pt desk
வீடியோ ஸ்டோரி

இ-சேவை மையங்களில் இருந்து கைரேகை பதிவு இயந்திரங்களை பெற்றுள்ள மாவட்ட நிர்வாகம் - பொதுமக்கள் அவதி

webteam

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக திருவாரூர் மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்களில் உள்ள கைரேகை பதிவு இயந்திரங்களை மாவட்ட நிர்வாகம் வாங்கியுள்ளது. பல்வேறு சேவைகளுக்கு பெரும்பாலும் தனியார் இ-சேவை மையங்களையே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அனைத்து கைரேகை பதிவு இயந்திரங்களையும் மாவட்ட நிர்வாகம் பெற்றுள்ளது. இதனால் ஆதார். ஓய்வூதியம் உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே இந்தப் பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுகப்பட்டுள்ளது.