வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா - எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர்

கலிலுல்லா

தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''கொரோனா வகைகளை கண்டறியும் மரபணு ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் செயல்பட தொடங்கும். டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா வகை வைரஸாலே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 80% பேர் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

சமீபநாட்களாக கொரோனா பாதிப்பில் 100% டெல்டா வகையால் ஏற்படுகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் தமிழகத்தில் உள்ளன. அதிக பண்டிகைகள் வரவுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்டம் கூடுவததால்தான் கொரோனா அதிகளவு பரவுகிறது. கூட்டம் கூடுவதை தவிர்த்து மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தலாம்'' என்று தெரிவித்துள்ளார்.