வீடியோ ஸ்டோரி

டெல்லி: செல்போனை பறித்து பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்

kaleelrahman

டெல்லியில் செல்போன் பறிப்பின்போது, பெண் ஒருவரை கொள்ளையர்கள் சாலையில் இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shalimar Bagh என்ற இடத்தில் மக்கள் நடமாட்டமிக்க சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த பெண், கொள்ளையர்களின் சட்டையை பிடித்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணை சுமார் 150 மீட்டர் தூரம் சாலையில் தரதரவென இழுத்துச்சென்று கீழே தள்ளிவிட்டு கொள்ளையர்கள் தப்பினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை டெல்லி காவல் துறையினர் தேடி வருகின்றனர்