வீடியோ ஸ்டோரி

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடல் தகனம் - தேனி எம்.பி. ரவீந்திரநாத் இறுதிசடங்கு

Veeramani

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு விஜயலட்சுமியின் உடல் எடுத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு சார்பில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து விஜயலட்சுமியின் உடல் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மூத்த மகனான தேனி எம்.பி. ரவீந்திரநாத், தாயாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார்.