வீடியோ ஸ்டோரி

12- 18 வயதுனருக்கு ஜைடஸ் கெடிலாவின் கொரோனா தடுப்பு மருந்து

Veeramani

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜைடஸ் கெ

டிலா நிறுவனம் ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்தான ஜைவ்கோவ் டி மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து 12 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக 3 டோஸ்களை கொண்டது. இந்த நிலையில், விரைவில் ஜைகோவ் டி சப்ளையை தொடங்கிவிடுவோம் என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மருந்து கிடைக்கும் எனவும் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.

ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், அழுத்தம், மின்முனை மூலம் மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.