வீடியோ ஸ்டோரி

'தலைவன் இருக்கிறான், வருவான்..' - முழக்கமிட்ட வளர்மதி... அதிர்ந்த அரங்கம்

JustinDurai

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டத்தில், அதிமுக தீர்மானத்தை வரவேற்று முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர், “காலையிலிருந்து நீங்கள் எல்லாம் இங்கு வந்திருப்பதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது, ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே’ அந்தத் தலைவன் இருக்கிறான்; வருவான். வெளியே வருவான், வெகு விரைவில் வருவான்” என்று பேசினார். இப்பேச்சை கூட்டத்திலிருந்த இ.பி.எஸ் தொண்டர்கள்  வரவேற்று கோஷங்களை எழுப்பினர்.