வீடியோ ஸ்டோரி

முழு கொள்ளளவை எட்டிய மதுராந்தகம் ஏரி: 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

JustinDurai
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், எப்போது வேண்டுமானாலும் உபரிநீர் கிளியாற்றில் திறந்துவிடப்படும் என்பதால் 21 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியிருப்பதால் கிளியாற்றில் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கிளியாற்றின் கரையோரம் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.