வீடியோ ஸ்டோரி

"இல்லாததை சொன்னால் நாக்கு உங்களுக்கு சொந்தமாக இருக்காது" - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

EllusamyKarthik

பெண்களை தொடர்ந்து இழிவாக பேசினால் திமுகவினரின் நாக்கு அவர்களுக்கு சொந்தமாக இருக்காது என அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது அவர் இவ்வாறு பேசினார்.

"திமுகவினர் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேளுங்கள். செய்யப்போகும் திட்டங்களை கூறி வாக்கு சேகரியுங்கள். அதைவிடுத்து இல்லாததை சொன்னால் நாக்கு உங்களுக்கு சொந்தமாக இருக்காது” என்று அவர் பேசினார்.