வீடியோ ஸ்டோரி

ஒரே நேரத்தில் அணிவகுத்துச் சென்ற 14 தேஜஸ் விமானங்கள்

Sinekadhara

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் அணிவகுத்துச் சென்றன.

சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதால் இந்தியா போர் விமானங்களை தயார் நிலையில் வைக்க பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் ஒத்துழைப்பால் இந்த சாகசமும் சாத்தியமாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.