டிரெண்டிங்

ஓபிஎஸ் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசித்தது என்ன? வெளியானது தகவல்..!

webteam

ஓபிஎஸ் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசித்தது என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடத்தினர். சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், 14 அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 16 பேர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரச்னைகளை களைய குழு அமைக்க ஓபிஎஸ் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முரண்பாடுகளை களைவது குறித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் நேரடியாக பேச வேண்டும். கூட்டாக அறிக்கை வெளியிட வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாகவும் கூட்டாக தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.