டிரெண்டிங்

“நாம் அனைவரும் முதலில் இந்து, மற்றவை பிறகுதான்” - ரவீந்திரநாத் பேச்சு

rajakannan

நாம் அனைவரும் முதலில் இந்து. மற்றவை பிறகுதான் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசியுள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய எம்பி ரவீந்திரநாத் குமார், “நாம் அனைவரும் முதலில் இந்து. மற்றவை பிறகுதான். முதலில் நாம் அனைவரும் இந்து என்ற உணர்வு ஏற்படவேண்டும். நமக்குள் ஒற்றுமை வேண்டும்” எனக் கூறினார்.