டிரெண்டிங்

தூக்கத்திற்கு இடையூறு : சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி மருத்துவமனையில் அனுமதி

webteam

தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் வேலூர் மத்திய சிறையில் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் பர்மா பாண்டி(32). கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி பாண்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஏற்கெனவே இருந்த மற்றொரு கைதி நேற்று இரவு தனக்கு மனநிலை சரியில்லை என அங்கு வந்த சிறை காவலரோடு சோகத்தை பகிர்ந்து கொண்டிருந்துள்ளார். இதனால் உறங்கிக்கொண்டிருந்த பாண்டியனுக்கு தொந்தரவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை காவலரோடு பாண்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆந்திரம் அடைந்த கைதி பாண்டியன் அருகில் இருந்த சேவிங் செய்யும் மிஷினை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை தடுத்த சிறை காவலர்கள் பாண்டியனை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிறைத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.