டிரெண்டிங்

வேலூர்: அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

kaleelrahman

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு வேலூர் மக்கான் சிக்னலில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காரில் இருந்த பா.ம.க கட்சி துண்டுகள், துண்டு பிரசுரங்கள், அணைகட்டு தொகுதிக்குட்பட்ட அதிமுக வேட்பாளரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டையும் பறிமுதல் செய்து, வேலூர் மத்திய மாவட்ட முன்னாள் பாமக தலைவர் புருசோத்தமன், இளைஞரணிச் செயலாளர் சதீஷ், கார் ஓட்டுனர் கோபி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கைதான 3 பேர் மற்றும் அணைகட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.