டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

kaleelrahman

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முகவர்கள் அரசின் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் முகவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையில் புகைப்படம் இடம்பெறாது என்பதால் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முகவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது