டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்.19 பொதுவிடுமுறை

Veeramani

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக, 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.