டிரெண்டிங்

உடுமலை: தாயுடன் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பரிதாபமாக உயிரிழப்பு..!

kaleelrahman

தாயுடன் ஆற்றை கடக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை சடலமாக மீட்டு கேரள வனத்துறையினர் தகனம் செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள பகுதியில் உள்ளது பாம்பாறு. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான இந்த பாம்பாற்றை தாய் யானையுடன் கடக்க முயன்ற குட்டியானை எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாறையிடுக்கில் சிக்கி உயிரிழந்தது.

தகவலறிந்து வந்த கேரள வனத்துறையினர் யானையின் உடலை கயிறுகட்டி மீட்டு வனத்துறை முறைப்படி, வனப்பகுதியில் தகனம் செய்தனர் பாம்பாற்றில் தாயுடன் வந்த குட்டியானை நீரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..