டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் வெற்றி அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் 9 பேர் அதிமுகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட 9 பேரும் இன்னும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து நீக்கம் செய்யப்படவில்லை.