டிரெண்டிங்

தினகரன் போட்டியாளராகக் கூடக் கருதவில்லை: ஜெயக்குமார்

webteam

தினகரனை எங்களுக்குப் போட்டியாளராக கூட கருதவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகரில் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம் இபிஎஸ் - ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் தனக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட வேண்டும் என கோரியிருக்கிறார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை என்றும் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தேர்தல் ஆணைய விதிகளை மீறி டிடிவி தினகரன் மனுத்தாக்கலின் போது கூட்டத்தை கூட்டியுள்ளார் என குற்றம்சாட்டினார்.
எங்களின் அரசியல் எதிரி திமுகதான். திமுக தமிழகத்தை ஆளக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் அதிமுக கட்சி எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.