டிரெண்டிங்

15 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு: டிடிவி தினகரனின் வெற்றி உறுதி!

webteam

15வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 15 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 15வது சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். 15வது சுற்று முடிவுப்படி 72,413 வாக்குகள் பெற்றுள்ள டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

15வது சுற்று முடிவுப்படி டிடிவி தினகரன் வெற்றி உறுதியாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் 38966 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். திமுக வேட்பாளர் 20388 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3535 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 1185 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 2000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பாஜக பெற்று வருகிறது. இன்று மாலை 6:00 மணியளவில் டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்கிறார்.