டிரெண்டிங்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் – சென்னையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்

Veeramani

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிர படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகையில் ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், நாளை 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ,வார்டு மறுவரையறை குறித்து விவாதிக்க உள்ளனர். வார்டு மறுவரையறை சரியாக செய்யவில்லை என்று அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.