டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: பேரிடர் காலத்தில் பேருதவி புரியும் கொடையாளர்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: பேரிடர் காலத்தில் பேருதவி புரியும் கொடையாளர்கள்

நிவேதா ஜெகராஜா

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை என்ற திட்டத்தின் மூலம் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்குத் தேவையான உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் தனி நபர்களும் தங்களால் ஆன பொருள் மற்றும் நிதியுதவிகளை நல்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஹரியானாவிலிருந்து லெனின் குமார் என்பவர் ஐந்தாயிரம் ரூபாயும், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பத்தாயிரம் ரூபாயும், சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பதினைந்தாயிரம் ரூபாயும் அளித்துள்ளனர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளை ஏற்று செய்யப்பட்ட சிறு உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'