டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: 15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகைப்பொருட்கள் வழங்கல்

JustinDurai

'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் சென்னையில் 15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு 'புதிய தலைமுறை'யின் துளிர்க்கும் நம்பிக்கை உதவிக்கரம் நீட்டி வருகிறது. 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் உதவி தேவைப்படுவோருக்கு தேவையான அரசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று சென்னை கொளத்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், வியாசர்பாடி கன்னிகாபுரம், கண்ணதாசன் நகர், எம்ஆர் நகர், முத்தமிழ் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் 15 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.