டிரெண்டிங்

குடியிருப்புக்குள் புகுந்த ஆமை... கூடி நின்று செல்ஃபி எடுத்த மக்கள்

kaleelrahman

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் இருந்த ஆமையை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதி என்.ஜி.ஓ.பி காலனி. இங்குள்ள நான்காவது தெருவில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் காலையில் நடைபயிற்சிக்காக தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டு வாசலில் ஒரு ஆமை இருப்பதைப் பார்த்துள்ளார். உடனே அதனை அப்புறப்படுத்த முயற்சித்தபோது அது வீட்டு வாசல் பகுதியில் இருந்து செல்லாமல் அப்படியே நின்றுள்ளது. 


இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் ஆமையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆமையை காட்டுப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். முன்னதாக ஆமை குடியிருப்பு பகுதிக்குள் வந்ததை கேள்விப்பட்ட பலர் அந்த சிறிய ஆமை வேடிக்கை பார்த்ததோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.