யூடியூபர்
யூடியூபர்  NGMPC22 - 168
டிரெண்டிங்

தென்கொரிய யூடியூபரிடம் பணம் வசூல் செய்த போக்குவரத்து காவலர் பணி இடை நீக்கம்; காரணம் இதுதான்!

PT

தலைநகர் டெல்லியில் தென் கொரிய யூடியூபரிடம் பணம் வசூலித்த போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி தென் கொரிய யூடியூபரிடம் காவலர் மகேஷ்சந்த், 5 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளார்.

ஆனால், அதற்கான ரசீது வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தென் கொரிய யூடியூபர்ட்விட்டரில் வெளியிட, டெல்லி காவல்துறை முகேஷ் சந்த் மீதுநடவடிக்கை எடுத்து அவரை பணியிடை
நீக்கம் செய்துள்ளது.