டிரெண்டிங்

ஆடிட்டர் குருமூர்த்தியை சாடும் எஸ்வி சேகர்!

webteam

மஹா பெரியவரின் படத்தை உபயோகிக்காமல் சொந்த முகத்துடன் மோதுங்கள் என குருமூர்த்திக்கு எஸ்வி சேகர் மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.

துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காலம் கடந்தது என விமர்சித்திருந்தார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவர் தொடர்பாக, கடுமையான சொல் ஒன்றை பயன்படுத்தியும் அவர் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்துக்களை பதிவிட்டுள்ள குரூமூர்த்தி, ட்விட்டரில் முகப்பாக காஞ்சி பெரியவரின் படத்தை வைத்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர், “மஹா பெரியவரின் படம் அரசியல் சித்து விளையாட்டு விமர்சனங்களில் முகப்பு படமாக உபயோகிக்கப்படுவது அவரின் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன வருத்தத்தையும் கொடுக்கிறது என்பதை சம்மந்தப்பட்ட மாமேதைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்கள் சொந்த முகத்துடன் மோதுங்கள்” என்று மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.