டிரெண்டிங்

தினகரன் வெற்றி பெறுவார்: சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

rajakannan

டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுப்ரமணியன் சுவாமியும் தனது ட்விட்டரில் இந்தக் கருத்தை  குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். 

மிகுந்த பரபரப்புக்கு நடுவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியில் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரன் 37 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் நின்றுவிடவில்லை. இது நல்ல செய்தி என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து கணிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கருத்துக் கணிப்பு, ஆய்வுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நானும், எனது நிர்வாகிகளும் கடந்த 20 நாட்களாக மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளோம். மக்களின் மனநிலை எங்களுக்கு தெரியும்” என்றார்.