டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: உதவிகோரிய மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரணம்

kaleelrahman

மதுரையில் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் உதவிகோரிய 6 மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உட்பட 10 குடும்பத்தினருக்கு புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மதுரை ஆணையூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான புஷ்பராஜ், கற்பகம், மீனாட்சி, மந்தையம்மாள், விஜயலட்சுமி மற்றும் அனுப்பானடியை சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக வேலை வாய்ப்பை இழந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவிற்கு உதவி வேண்டும் என கோரியிருந்தார். இதனைத்தொடர்ந்து புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் 10 குடும்பத்திற்கு ஓரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.